by Staff Writer 25-02-2020 | 7:28 PM
Colombo (News 1st) நாளை (26) நள்ளிரவு தொடக்கம் 450 கிராம் நிறையுடைய பாண் ஒரு இறாத்தலுக்கான விலையை 5 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் M.K.ஜயவர்தன குறிப்பிட்டார்.
இந்த விலை குறைப்பை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துமாறு M.K.ஜயவர்தன அனைத்து விற்பனையாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.