by Staff Writer 25-02-2020 | 7:34 AM
Colombo (News 1st) பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரிச்சலுகையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், இன்று (25) பிற்பகல் நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை குறித்து தீர்மானிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் கூறியுள்ளது.