திஸ்பனையில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது

திஸ்பனையில் பாடசாலை மாணவர்கள் நால்வர் கைது

by Staff Writer 25-02-2020 | 3:33 PM
Colombo (News 1st) லிந்துலை - திஸ்பனை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வாரம் இடம்பெற்ற திருட்டுச்சம்பவம் தொடர்பில் நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்பனையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 10 முதல் 14 வயதிற்கு இடைப்பட்ட மாணவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையில் மடிக்கணினி ஒன்று திருடப்பட்டமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.