ஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

ஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 18 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 25-02-2020 | 1:55 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (26) காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜா-எல மற்றும் கட்டுநாயக்க / சீதுவ நகர சபைக்குட்பட்ட பகுதி, ஜா-எல, ஏக்கல, கந்தான, ஆனியாகந்த, துடெல்ல, மாஎலிய ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அத்துடன் கெரவலப்பிட்டிய, மாத்தாகொட, மாபோல, மாபாகே, உஸ்வெட்டகெய்யாவ, பமுனுகம, போப்பிட்டிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.