by Staff Writer 25-02-2020 | 11:55 AM
Colombo (News 1st) சீனாவில் உளவுபார்த்த குற்றச்சாட்டில் புத்தக விற்பனையாளர் ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிறந்து சுவீடன் குடியுரிமை பெற்ற கிய் மின்ஹாய் (Gui Minhai) என்ற குறித்த நபர், உளவுபார்த்துள்ளதாகத் தெரிவித்து குறித்த நபருக்கு சீன நீதிமன்றம் ஒன்று சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சீனா மற்றும் சுவீடனுக்கு இடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் வகையில், குறித்த நபர் செயற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.