ஆசிரியர், அதிபர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் நாளை பணிப்பகிஷ்கரிப்பு 

by Staff Writer 25-02-2020 | 7:09 PM
Colombo (News 1st) சில கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினர் நாளை (26) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். 30 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார். இவர்களின் கோரிக்கை தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் M.H.M.சித்ராநந்தவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. தொழிற்சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் பரிசீலிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.