பெரும்போக அறுவடையில் அதிக விளைச்சல்

பெரும்போக அறுவடையில் அதிக விளைச்சல்

by Staff Writer 24-02-2020 | 7:11 PM
Colombo (News 1st) பெரும்போக அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், விவசாயத் திணைக்களம் எதிர்பார்த்ததை விட விளைச்சல் அதிகமாகக் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுமார் 2.97 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி கிடைக்கப்பெறும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்தத் தடவை பெரும்போகத்தில் 2.4 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி கிடைக்கும் என விவசாயத் திணைக்களம் முன்னர் தெரிவித்திருந்தது. இருப்பினும், விளைச்சல் சிறப்பாகவிருந்தமையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.