முச்சக்கரவண்டி திருட்டு: சந்தேகநபர் கைது

புஸ்ஸல்லாவையில் முச்சக்கரவண்டி திருட்டு: சந்தேகநபர் ஒருவர் கைது

by Staff Writer 24-02-2020 | 3:48 PM
Colombo (News 1st) புஸ்ஸல்லாவை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். புஸ்ஸல்லாவை - ஹெல்பொட பகுதியில் வீடொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் முச்சக்கரவண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸல்லாவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக நேற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியே காணாமல் போயுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்று சுமார் 4 மணித்தியாலங்களில் புஸ்ஸல்லாவை - ஹெல்பொட பகுதியில் முச்சக்கரவண்டி மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.