நுரைச்சோலை அனல்மின் நிலைய செயலிழப்பு: ஆராய குழு

நுரைச்சோலை அனல்மின் நிலைய திடீர் செயலிழப்பு குறித்து ஆராய விசேட குழு 

by Staff Writer 24-02-2020 | 6:34 PM
Colombo (News 1st) நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திடீர் செயலிழப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் திடீர் செயலிழப்பு தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நோக்கத்தில் இடம்பெற்றதா என்பது தொடர்பில் இந்தக் குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.