Online விண்ணப்பம்: பிரச்சினைகளை தீர்க்க புதிய வழி

Online விண்ணப்பம் குறித்த பிரச்சினைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்

by Staff Writer 23-02-2020 | 12:32 PM
Colombo (News 1st) உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு Online ஊடாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தமக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த பரீட்சைகளுக்கான Online ஊடாக விண்ணப்பிப்பதற்கான மென்பொருள் ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் அறிமுகப்படுத்தியது. இதனூடாக உயர்தரப் பரீட்சை வரை விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. குறித்த இணையத்தள மென்பொருள் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமானால் 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது பாடசாலை பரீட்சை ஏற்பாட்டுக் குழுவிற்கோ அறிவிக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார்.