ஹெரோயின் கடத்தல்: 2 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட அறுவர் கைது

by Staff Writer 23-02-2020 | 9:22 AM
Colombo (News 1st) பிலியந்தலை - தெல்தர பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் 60 இலட்சம் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண், வீடொன்றை வாடகைக்கு எடுத்து ஏனைய சந்தேகநபர்களுடன் இணைந்து நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயினை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 17, 27, 28, 36, 47, மற்றும் 52 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரும் இன்று கெஸ்பேவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.