தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று திறப்பு

தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று திறப்பு

by Fazlullah Mubarak 23-02-2020 | 8:18 PM

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - கொடகம தொடக்கம் ஹம்பாந்தோட்டை பரவகும்புற வரையான பகுதி இன்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டன.

இந்த வீதியில் நாளை முற்பகல் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தெற்கு அதிவேக வீதியின் புதிய பகுதியை இன்று திறந்துவைத்தனர். 56 கிலோமீற்றர் தூரமுள்ள இந்த வீதியில் 5 நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அபரெக்க பகுதியில் வாகனங்களில் இருந்து இறங்கிய ஜனாதிபதியும் பிரதமரும் மக்களை சந்தித்தனர். பரவகும்புற நுழைவாயில் அருகே விழா நடைபெற்றது.