தெற்கு அதிவேக வீதியின் ஒரு பகுதி இன்று திறப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்று திறப்பு

by Staff Writer 23-02-2020 | 9:00 AM
Colombo (News 1st) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் விரிவாக்கல் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டமான மாத்தறை, கொடகம முதல் பரவகும்புக வரையான வீதி இன்று (23) திறக்கப்படவுள்ளது. 5 இடைப்பரிமாற்றத்தைக் கொண்ட இந்த வீதியின் முழு நீளமும் 56 கிலோமீற்றர்களாகும். கொடகம பாலட்டுவ, அபரெக்க, பெலியத்த, கசாகல மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் இடைப்பரிமாற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாத்தறை - கொடகம முதல் பரவகும்புக வரையான குறித்த அதிவேக வீதியானது இரு கட்டங்களாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.