போதை வில்லைகள் விற்கும் குழு பொலிஸாரால் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை வில்லைகள் விற்கும் குழு பொலிஸாரால் கைது

by Staff Writer 22-02-2020 | 4:35 PM
Colombo (News 1st)  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை வில்லைகள் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்யும் குழுவொன்றை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர். களுத்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 24 மற்றும் 27 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2300 போதை வில்லைகளும் 3 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.