பங்களாதேஷில் கைதான மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை

பங்களாதேஷில் கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை

by Staff Writer 22-02-2020 | 4:18 PM
Colombo (News 1st) பங்களாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை மீள அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். கடற்றொழில் அமைச்சு, வௌிவிவகார அமைச்சுடன் இணைந்து பங்களாதேஷ் வௌிவிவகார அமைச்சுடன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஹிக்கடுவ, பெரேலிய உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 27 மீனவர்கள் 4 படகுகளுடன் பங்களாதேஷ் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.