நீர்வெட்டை அறிவிக்க குறுந்தகவல் சேவை அறிமுகம்

நீர்வெட்டை அறிவிக்க குறுந்தகவல் சேவை அறிமுகம்

by Staff Writer 22-02-2020 | 4:13 PM
Colombo (News 1st)  அவசர திருத்தப் பணிகள் உள்ளிட்ட விடயங்களை அறிவிப்பதற்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குறுந்தகவல் சேவையை ஆரம்பித்துள்ளது. நிலவும் வறட்சி காரணமாக சில பகுதிகளுக்கு இடைக்கிடையே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு தொடர்பில் பாவனையாளர்களுக்கு அறிவிப்பதற்காகவே குறுந்தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த குறுந்தகவல் சேவையை பெற்றுக்கொள்ள நீர்கட்டண பட்டியலின் கணக்கிலக்கத்தை 071 93 99 999 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்துகொள்ள முடியும். இந்த இலவச குறுந்தகவல் சேவையூடாக மாதாந்த நீர்கட்டணம், நீர்வெட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும்.