சுங்க அதிகாரிகள் இருவர் சென்னையில் கைது

தங்கம் கடத்த உதவிய சுங்க அதிகாரிகள் இருவர் சென்னையில் கைது

by Staff Writer 22-02-2020 | 4:25 PM
Colombo (News 1st) இலங்கை மற்றும் துபாயிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதற்கு உதவி புரிந்த சுங்க அதிகாரிகள் இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்களிடமிருந்து 5.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சுங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தங்கம் கடத்தப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கடமையாற்றும் சுங்க அதிகாரிகளிடம் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட 12.6 கிலோகிராம் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.