பயணியை அச்சுறுத்திய இடைத்தரகர்கள் ஐவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியை அச்சுறுத்திய இடைத்தரகர்கள் ஐவர் கைது

by Staff Writer 22-02-2020 | 4:53 PM
Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரித்து நின்ற பயணியொருவரை அச்சுறுத்திய இடைத்தரகர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தரித்திருந்த 60-க்கும் அதிகமான இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.