மார்ச் முதலாம் திகதி 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும்: ஆறுமுகன் தொண்டமான்

by Staff Writer 21-02-2020 | 6:55 PM
Colombo (News 1st) எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இன்று தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் பெருந்தோட்டக் கம்பெனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது எனினும், இந்த பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர கலந்து கொண்டிருந்த நிலையில் , குறித்த அழைப்பை புறக்கணித்து கம்பனிகள் கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், மீண்டும் நேற்று (20) கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.