மாத்தளையில் விபத்து: இருவர் பலி, 43 பேர் காயம்

மாத்தளையில் சுற்றுலா பஸ் தனியார் பஸ்ஸூடன் மோதி விபத்து: இருவர் பலி, 43 பேர் காயம்

by Staff Writer 21-02-2020 | 3:45 PM
Colombo (News 1st)  மாத்தளை - நாவுல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவனொருவன் உள்ளிட்ட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 43 பேர் காயமடைந்துள்ளனர். சுற்றுலா சென்ற பஸ் ஒன்று தனியார் பஸ்ஸுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர். விபத்தில் 11 வயதான சிறுவனொருவனும் 60 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாத்தளை மற்றும் தம்புளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு பஸ்களின் சாரதிகளும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.