சடலம் மீட்பு; பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகம் 

கடவத்தை பொலிஸ் கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் பன்னல காட்டில் கண்டெடுப்பு

by Staff Writer 21-02-2020 | 3:38 PM
  Colombo (News 1st) கடவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் காணாமற்போன கான்ஸ்டபிளுடையது என சந்தேகிக்கப்படும் சடலமொன்று பன்னல பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. பன்னல - வேரஹெர காட்டுப்பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைத்த தகவலுக்கமைய இன்று அதிகாலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த திங்கட்கிழமை (17) காணாமற்போனார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.