CBSL நிதிச்சபை உறுப்பினராக சஞ்ஜீவ ஜயவர்தன

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை உறுப்பினராக சஞ்ஜீவ ஜயவர்தனவை நியமிக்க அனுமதி

by Staff Writer 21-02-2020 | 4:08 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தனவை நியமிக்க அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை ஜனாதிபதி அரசியல் அமைப்பு பேரவைக்கு சமர்ப்பித்திருந்தார். C.P.R. பெரேரா நிதிச்சபையிலிருந்து விலகியமையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளார்.