by Staff Writer 20-02-2020 | 3:42 PM
Colombo (News 1st) ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்திச்சென்று கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் இராணுவப்புலனாய்வுப் பிரிவின் 9 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதியரசர் குழாம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று சம்பத் அபேகோன், சம்பத் விஜேரத்ன மற்றும் கிஹான் குலத்துங்க ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.