ஜெர்மனியில் சரமாரி துப்பாக்கிச்சூடு ; 9 பேர் பலி

ஜெர்மனியில் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்; 9 பேர் பலி

by Chandrasekaram Chandravadani 20-02-2020 | 7:52 AM
Colombo (News 1st) ஜெர்மனியின் ஹனோவ் (Hanau) நகரில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்போது மேலும் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹனோவ் City Centre இல் உள்ள மதுபானசாலையில் முதலாவது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகாக இரண்டாவது சூட்டுச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.