கம்பஹா மாவட்டத்தில் இன்று 18 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தில் இன்று 18 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 20-02-2020 | 6:55 AM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தில் இன்று (20) காலை 8 மணி தொடக்கம் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏக்கல, கந்தான, ஆனியாகந்த உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 8 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, குடெல்ல, கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, வெலிசறை, மாபோல ஆகிய பகுதிகளிலும் மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.