by Staff Writer 20-02-2020 | 1:36 PM
Colombo (News 1st) சீதுவ - கெலாபத பகுதியில் பரவும் தீ காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா - எல முதல் கட்டுநாயக்க வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவாயிலூடாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் ஜா-எல நுழைவாயிலூடாக பிரவேசித்து கொழும்பு நோக்கி பயணிக்க முடியும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீதுவ பகுதியின் கட்டுநாயக்க - கொழும்பு அதிவேக வீதியின் கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் ஒழுங்கைக்கு அருகிலுள்ள கெலாபத பகுதியில் தீ பரவியுள்ளது.
சீதுவ தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயினால் அதிவேக வீதியின் குறித்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.