by Staff Writer 19-02-2020 | 3:57 PM
Colombo (News 1st) கொலைச்சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட 6 பேருக்கு காலி மேல் நீதிமன்றத்தால் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி ரத்கம பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றொருவரை காயப்படுத்தியமை தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி வசந்த ஜினதாச, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளமையால், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தார்.