by Staff Writer 19-02-2020 | 7:21 AM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இரண்டாவது நாளாக இன்றும் (19) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, ஒத்திவைப்புவேளை விவாதத்திற்கான பிரேரணையாக நேற்று இந்தப் பிரேரணையை சபையில் சமர்பித்திருந்தார்.
நேற்று ஆரம்பமான விவாதம், இரண்டாம் நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.