விஜித்த ரவிப்பிரிய சுங்க பணிப்பாளர் நாயகமானார்

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய சுங்க பணிப்பாளர் நாயகமாக நியமனம்

by Staff Writer 19-02-2020 | 8:35 PM
Colombo (News 1st) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை பீரங்கிப் படையணியின் முக்கிய அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய இராணுவ சேவைக் காலத்தில் பல பதவிகளை வகித்திருந்தார். வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய சேவையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.