அவுஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளி; நால்வர் பலி

அவுஸ்திரேலியாவை தாக்கிய சூறாவளி; சிட்னியில் 60,000 தடவைகள் இடி மின்னல், நால்வர் பலி

by Bella Dalima 19-02-2020 | 3:43 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவை தாக்கியுள்ள சூறாவளி காரணமாக சிட்னி நகர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சிட்னி நகரில் மாத்திரம் 60,000 தடவைகள் இடி மின்னல் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இடி மற்றும் மின்னலினால் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் காரொன்று தீப்பற்றிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 10 வயதிற்கும் குறைந்த மூன்று சிறுவர்கள் உள்ளடங்குவதாக குயின்ஸ்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.