புத்தளம் - வண்ணாத்திவில்லு மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் - வண்ணாத்திவில்லு மக்கள் ஆர்ப்பாட்டம்

by Staff Writer 18-02-2020 | 1:47 PM
Colombo (News 1st) புத்தளம் - வண்ணாத்திவில்லு, பூக்குளம் கிராம மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் கிராமத்திற்கான காணியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார். தங்களின் கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்கும் வரை, ஆர்ப்பாட்டத்தைக் கைவிடப் போவதில்லை என புத்தளம் - வண்ணாத்திவில்லு, பூக்குளம் கிராம மக்கள் குறிப்பிடுகின்றனர்.