ஜா-எல, சீதுவ உள்ளிட்ட சில பகுதிகளில் நீர்வெட்டு

ஜா-எல , கட்டுநாயக்க உள்ளிட்ட சில பகுதிகளில் 20 ஆம் திகதி நீர்வெட்டு

by Staff Writer 18-02-2020 | 5:11 PM
Colombo (News 1st) ஜா-எல , கட்டுநாயக்க , சீதுவ நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏக்கல, கந்தான, ஆனியாகந்த உள்ளிட்ட சில பகுதிகளிலும் நாளை மறுதினம் (20) காலை 08 மணி முதல் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. குடெல்ல, கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, வெலிசற, மாபொல ஆகிய பகுதிகளிலும் மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.