போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்றோர் கைது

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற 213 பேர் கைது

by Staff Writer 17-02-2020 | 5:33 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திற்குள் சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருளுடன் சென்ற 213 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் 199 பேர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதுடன் 14 பேர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.