கான்ஸ்டபிள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை 

கடவத்தை பொலிஸ்நிலைய கான்ஸ்டபிள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணை 

by Staff Writer 17-02-2020 | 6:53 PM
Colombo (News 1st) கடவத்தை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (17) காலை முதல் பொலிஸ் நிலையத்தில் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனதாகக் கூறப்படும் குறித்த கான்ஸ்டபிள் நேற்றிரவு பொலிஸார் தங்குமிடத்தில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாத்தறையைச் சேர்ந்த 37 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.