ஏப்ரல் தாக்குதல் : 12 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் தாக்குதல் : 12 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 17-02-2020 | 5:21 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரின் விளக்கமறியல் மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது நீதவான் I.N. ரிஷ்வான் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளார். வழக்கு இருவேறு சந்தர்ப்பங்களில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வெவ்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று மீண்டும் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு எதிர்வரும் 2ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.