எம்பிலிபிட்டிய வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை

எம்பிலிபிட்டிய வைத்தியசாலையைத் தரமுயர்த்த நடவடிக்கை

by Staff Writer 17-02-2020 | 6:15 PM
Colombo (News 1st) எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். அதிக நோயாளர்கள் வருகைதரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையை அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் காணப்படும் மனித மற்றும் பௌதீக வளம் தொடர்பிலும் ஏனைய தேவைகள் தொடர்பிலும் ஆராய்வதற்காக நேற்று எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் நிலவும் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 750 இலட்சம் ரூபா நிதியுதவியாக அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.