பிரித்தானியாவில் வௌ்ள அபாய எச்சரிக்கை

பிரித்தானியாவின் சில பகுதிகளில் வௌ்ள அபாய எச்சரிக்கை

by Chandrasekaram Chandravadani 16-02-2020 | 8:15 AM
Colombo (News 1st) பிரித்தானியாவைத் தாக்கிய புயலினால் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சியாரா புயல் தாக்கியதைத் தொடர்ந்து, ஒரே வாரத்திற்குள் மற்றுமொரு புயல் பிரித்தானியை தாக்கியுள்ளது. இதன்காரணமாக விமான சேவைகளும் ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. டென்னிஸ் புயலினால் பலத்த மழையுடன் கடும் காற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தைத் தொடர்ந்து இயற்கை அனர்த்தம் தொடர்பில் பிரித்தானியாவில் 30 எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.