சிறுபோகத்தில் 40 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

சிறுபோகத்தில் 40 இலட்சம் கிலோகிராம் நெல் கொள்வனவு

by Staff Writer 16-02-2020 | 12:00 PM
Colombo (News 1st) சிறுபோக அறுவடையில் 40 இலட்சம் கிலோகிராம் நெல், நெற்கொள்வனவு சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அறுவடை இடம்பெற்ற அனைது மாவட்டங்களிலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நெற்கொள்வனவு சபையின் உப தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார். நெல் அறுவடையை, உரிய தரத்துடன் வழங்கும் விவசாயிகளுக்கு ஒரு கிலோகிராம் நெல்லை 50 ரூபாவுக்கு வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.