இந்திய மீனவர்கள் 11 பேர் கைது

எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் கைது

by Staff Writer 16-02-2020 | 1:27 PM
Colombo (News 1st) கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களின் 3 படகுகளும் கடற்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களையும் இன்று பொறுப்பேற்கவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார். தமிழகம் - புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்களே கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.