மாதகலில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்

மாதகல் கடற்பரப்பில் 10 கோடி ரூபா பெறுமதியான தங்கம் பறிமுதல்: இருவர் கைது

by Staff Writer 15-02-2020 | 3:51 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மாதகல் கடற்பரப்பில் 10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. 14.35 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டிலிருந்து கடத்த முயற்சித்த போதே தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். மீன்பிடி படகொன்றில் தங்கம் கொண்டு செல்லப்பட்ட போது கடற்படையினரின் சுற்றிவளைப்பு காரணமாக தங்கத்தை சந்தேகநபர்கள் கடலில் வீசியுள்ளனர். கடற்படையின் சுழியோடிகளால் கடலில் வீசப்பட்ட தங்க பிஸ்கட்கள் அடங்கிய பொதி கைப்பற்றப்பட்டது. மாதகல் பகுதியை சேர்ந்த 27 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தையும் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.