by Staff Writer 15-02-2020 | 6:11 PM
Colombo (News 1st) சந்தைகளுக்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் விநியோகிப்பதை மேம்படுத்த தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நுகர்வுக்கு உதவாத தேங்காய் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவதே இதன் நோக்கமென சபை குறிப்பிட்டுள்ளது.
இதற்காக வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உற்பத்தியாளர்களுக்கு தொழில்நுட்ப அறிவினை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.