புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளராக தர்ஷன நியமனம்

புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மீண்டும் நியமனம்

by Staff Writer 14-02-2020 | 3:58 PM
Colombo (News 1st) புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கான பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் அனுமதியின் கீழ் அவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை ஆரம்பித்துள்ளார். நாட்டில் மூன்று புனர்வாழ்வு மத்திய நிலையங்கள் செயற்படுகின்றன. வவுனியா, சேனபுர மற்றும் கந்தகாடு ஆகிய பகுதிகளில் செயற்படும் இந்த நிலையங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

ஏனைய செய்திகள்