by Staff Writer 14-02-2020 | 4:12 PM
Colombo (News 1st) எத்தியோப்பியாவிலிருந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருள் மத்திய தபால் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
20 கிலோகிராம் நிறையுடைய போதைப்பொருள் பொதி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
போதைப்பொருள் பொதியை பெற்றுக்கொள்வதற்கு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதைப்பொருளை இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.