வீடமைப்புகளுக்கு உள்ளூர் ஓடுகளை பயன்படுத்த திட்டம்

அரச வீடமைப்பு திட்டங்களுக்கு உள்ளூர் ஓடுகளை மாத்திரம் பயன்படுத்த தீர்மானம்

by Staff Writer 14-02-2020 | 5:13 PM
Colombo (News 1st) அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டங்களுக்கு எதிர்காலத்தில் உள்ளூர் ஓடுகளை மாத்திரம் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனையின் பிரகாரம், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமைய எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 14,022 வீடுகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஓடுகளை பயன்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக துஷ்யந்த குறிப்பிட்டுள்ளார். பின்னடைவை எதிர்நோக்கியுள்ள ஓடு உற்பத்தி மற்றும் மட்பாண்ட உற்பத்திகளை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உற்பத்தியாளர்களுடன் விசேட கலந்துரையாடலும் நடத்தப்பட்டுள்ளது.