by Staff Writer 13-02-2020 | 10:17 AM
Colombo (News 1st) கல்கிஸ்ஸை - படோவிட்ட பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுற்றிவளைப்பின் போது ஒரு கிலோ 15 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 22 வயதான சந்தேகநபர், இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.