மாத்தறை மாவட்டத்தில் காளான் செய்கை மேம்பாடு

மாத்தறை மாவட்டத்தில் காளான் செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

by Staff Writer 13-02-2020 | 7:38 PM
Colombo (News 1st) மாத்தறை மாவட்டத்தில் காளான் செய்கையை மேம்படுத்த விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. காளான் செய்கை திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகள் 200 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காளான் செய்கைக்கு தேவைப்படும் உபகரணங்களை மானிய விலையில் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.