சகோதரரை சுட்டுக்கொன்ற நபர் தலைமறைவு

சூரியவெவயில் சகோதரரை சுட்டுக்கொன்ற நபர் தலைமறைவு

by Bella Dalima 13-02-2020 | 4:04 PM
Colombo (News 1st) சூரியவெவ - பத்தேவெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரராலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞர், சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் 27 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.