by Staff Writer 13-02-2020 | 6:20 PM
Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்களுக்கு தங்களிடமிருந்து மாதாந்தம் அறவிடப்படும் பணத்தை கணக்கிலிடுவது தொடர்பான தரவுகளை குறுந்தகவல் ஊடாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் 2.6 மில்லியன் நிரந்தர உறுப்பினர்கள் உள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது காணப்படும் நடைமுறைக்கு அமைய, உறுப்பினர்கள் 6 மாதம் அல்லது 12 மாதங்களின் பின்னரே தமது கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்கின்றனர்.
புதிய முறையினூடாக ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினரின் கையடக்கத் தொலைபேசிக்கு மாதாந்தம் அறவிடப்படும் பணம் தொடர்பில் உடனடியாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.