ஐந்து மாவட்டங்களில் வளி மாசு அதிகரிப்பு

கொழும்பு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வளி மாசு அதிகரிப்பு

by Staff Writer 12-02-2020 | 3:56 PM
Colombo (News 1st) கொழும்பு உள்ளிட்ட சில நகரங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்கள் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது. வவுனியா, புத்தளம், கண்டி, குருநாகல் ஆகிய நகரங்களிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நகரங்களில் இன்று முற்பகல் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் தரச்சுட்டி 100 புள்ளி வரை அதிகரித்திருந்ததாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார். இந்த மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.