கட்டுப்பாட்டு விலையில் நெல் விற்பதில் சிக்கல்

கட்டுப்பாட்டு விலைக்கு நெல்லை விற்க முடியாதுள்ளதாக புத்தளம் விவசாயிகள் விசனம்

by Staff Writer 12-02-2020 | 1:07 PM
Colombo (News 1st) புத்தளம் மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாதுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலையாக 50 ரூபாவை அறிவித்த போதிலும், தனியார் 37,38 ரூபாவுக்கே நெல்லைக் கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். புத்தளத்தின் பெரும்பாலான பகுதிகளில் களஞ்சியசாலைகள் இல்லாமையால், நெல்லைக் களஞ்சியப்படுத்தி அரசாங்கத்திடம் வழங்கமுடியாத நிலையில் தனியாருக்கு அவற்றை விற்பனை செய்வதாக இவர்கள் விசனம் குறிப்பிடுகின்றனர்.